பேச்சும் கல்லெறியும்
சிவத்தார்: நீங்கள் அரங்கிலே ஏறினதும் பார்வையாளர் கைதட்டல் கூடவாக்கிடக்கே! தங்கள் பேச்சில் ஏதாச்சும் மருந்து மாயம் உண்டோ!
முகத்தார்: எனக்குத் தெரிந்ததைத் தானே சொன்னேன்... சொல்கிறேன்... சொல்வேன்... அவங்களுக்குப் பிடிச்சிருக்குப் போல...
சிவத்தார்: நானும், எனக்குத் தெரிந்ததைத் தானே சொன்னேன்... ஆனால், கைதட்டலுக்குப் பதிலாகக் கல்லெறி தான் கிட்டுது...
முகத்தார்: நான் படித்துத் தெரிந்ததிலே சொல்லியிருப்பேன். நீயோ, தெருவெளியிலே பொடி, பெட்டையளின்ரயை பார்த்துத் தெரிந்ததிலே சொல்லியிருப்பாய்... அது தான் கல்லெறி விழுதோ...?