நண்பனின் இறப்பு

தோழா...!
உன் சிரிப்பு சத்தத்தையும்
உஷ்ண மூச்சிக்காற்றையும்
உன்னதமான நட்பையும்
உணர்கிறேன் இன்னும்

மலரின் உதிரவும்
மனிதனின் மறைவும்
உலகிற்கு புதிதல்ல - நண்பா
உன் பிரிவு
எங்களுக்கு அவ்வாறல்ல

பிரிவின் பின்னரும் - இன்னும்
எங்கள் கண்களில்
இருந்துகொண்டு தான் இருகிறாய்
வடிந்தோடும் கண்ணீராயல்ல - எங்கள்
கண்களை கலங்கவைக்கும்
கண்மணியாய்...!!!

எழுதியவர் : அ.ஸ்வின்டன் (10-Mar-13, 5:28 pm)
பார்வை : 13447

மேலே