விடியல்…!வெகு விரைவில்…!

விடியல்…!வெகு விரைவில்…!
=========================
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை
நிறைத்திட்டாலும்
துவளாமல்,தொடர்வோம்-
தன்னம்பிக்கை பாதையில்..
உதயத்தை தேடும் உள்ளங்களுக்கு
ஒவ்வொரு நாளும் புதிதாக தோன்றும்…
காவியங்கள் எழுதிட காகிதங்கள்-
மறந்திட்டலும் கூட ...
நல்ல சரித்திரங்கள்,
நெஞ்சங்களில் எழுதப்படும்.
உயர்வினை அடைந்திட
உழைக்க துடிக்கும் -உள்ளங்களுக்கு
நிச்சயம் தேவை...
உற்சாகமும் ,ஊக்கமும்
கவலைகளை உயிர்கெடுக்கும்
வேதனையாக உருவாக்கிவிடதே…
வேதனைகள் பொடிபொடியாகி விடும்
காரியத்தில் கவனம் வைத்தால்…
எல்லாரணங்களையும்....
காலம் ஆற்றிவிடும் ..!
லட்சிய வாழ்க்கை,
மேற்கொள்ளவோர் தமக்கு
வருடகணக்கில் வருடிக்கொள்ளும்
வறுமைகளும் வேதனைகளும்
மறைந்து போகும் –
ஒரு சில வெற்றிகளின் உதயத்தில்…
(“ஈழதமிழினம் வாழ களத்தில் நின்று போராடும்”, கல்லூரி மாணவ மணிகளுக்கு இந்த நண்பனின் கண்டு ரசித்த வரிகளே… காணிக்கை…!)

எழுதியவர் : Anbuselvan (16-Mar-13, 2:20 am)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 124

மேலே