தம்பி,தங்கைகளுக்கு ஒரு கதை ..!
![](https://eluthu.com/images/loading.gif)
அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல் வழியே சென்று கொண்டிருந்தார் ..அங்கு வயல்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருந்தன ...!
அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் ..
அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் - என்றாள்...!
இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் ...!
மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை..
இது -பிள்ளைக்குத்தான் - ஆகும் என்றாள் ...!
அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை ...!
மாறு வேடத்தை கலைத்த ராஜா மூவரையும்
அழைத்து விளக்கம் கேட்டார் ...?
*
*
*
*
*
விடை :
முகத்துக்கு உதவும் என்றது :மஞ்சள் பயிரிட உதவும் ...
வாய்க்கு உதவும் என்றது :வெற்றிலை பயிரிட உதவும் ...
பிள்ளைக்கு உதவும் என்றது :தென்னம் பிள்ளை பயிரிட உதவும் ...
நன்றி : பேராசிரியர் .எ .சோதி (புதிர் கதைகள் )