நிலாச்சோறு

மொட்டைமாடி வெளிச்சத்தில்...
தட்டில் வைத்த சாதம்...
அன்போடு பாலும் கலந்து...
அழகான விரலாலே குலைத்து...
பாசத்தோடு பால்நிலா காட்டி...
நீ ஊட்டிய நிலாச்சோறு...
இன்றும் குன்றவில்லை ஆசை...
நீ காட்டிய நிலவிருக்கு...
கையில் நிலாச்சோறிருக்கு...
நீயில்லை அம்மா...
என்னருகில்
ஊட்டிவிட நீயில்லை அம்மா
என்னருகில்...

எழுதியவர் : ராம்ப்ரித்விக் (28-Mar-13, 1:16 pm)
பார்வை : 93

மேலே