அரிவை
அரிவை
__________
[கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணின் கைபேசிக்கு திடீரென உயிர் வந்தது.
அது அவளுடன் பேசுகிறது. நீங்கள் விரும்பினால் இதை கேளுங்கள்...]
சிலிக்கான் தோட்டத்து பேசும்பழம் நான்..!
சில்லறை வணிகத்தில், சீனியர் முதலாளி நான்...!
விடியல் முதல் உறக்கம் வரை,
உன்னோடிருக்கும் உண்மையான உறவு நான்..!
உளறல்களையும் புழம்பல்களையும்
சலிக்காமல் உணர்ந்துகொள்ளும்,அஃறிணை அறிவு நான்..!
உன் வளையல்கரங்களுக்குள், உரிமையோடு விளையாடவே,
வரம்வாங்கி வந்த ஒரு கைபேசி நான்...!
உன்னைப்பற்றி கொஞ்சம் சொல்லப்போகிறேன்;
உண்மையென்பதால் உளறவும்போகிறேன்.....,
மென்மையின் அகராதி நீ..!
பெண்மையின் பெரும்பரிசு நீ...!
இன்ப நீரூற்றின் அன்புத்துளிச்சாரலில்
பண்பாட்டு மணல்சேர்த்து,
தமிழாடை உடுத்தியெடுத்த
தேன்மதுர தேவதை நீ...!
உன் கைவிரல் நகம்பட்டு,
என் Touch Screen Pixal-கள் எல்லாம்
ஒவ்வொன்றாய் பூப்பூத்தது...!
கருங்கூந்தல் காதோறம்
நீ வைத்து பேசியதால்,
என் MICROPHONE SENSORகளும்
மணம் வீசத் தொடங்கியது...!
உன் கைப்பையில் என்னை சிறைவைக்காதே...,
நான் கதரியளும்போதேல்லாம், RINGTONE என்கிறாய்..!
துடித்து எழும்போதெல்லாம், VIBRATION MODE என்கிறாய்..!
ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன்
குறுஞ்செய்தியில்(SMS) உரையாடும்,
உன் MULTITASKING திறம் கண்டு
என் PROCESSOR CORE பதறிப்போனது..!
NETWORKING PROTOCOL குழம்பிப்போனது..!
இறுதியாக நான் ஓய்வெடுத்தது,
எப்போதென்றே மறந்து போனது....!
திரைக்கண்ணாடி பிரதிபலிப்பில்
முகம்பார்த்து சிரிக்கும் உன்னால்,
என் BATTERY CHARGER வேலையில்லாமல் உறங்கியது..!
திடீரென சிரிக்கிறாய், திடீரென அழுகிறாய்,
காரணம் யோசித்தே நான் IMEI மறந்தேன்....!
என் ANDROID OS-க்கு அதை விளக்கிச் சொல்வாயா...?
இல்லை,புரியாமல் புதிர்போட்டு வழக்கம்போல் செல்வாயா...?
என் CAMERA-ஐ கொஞ்சம் ON செய்,
உன் நாணம் ததும்பும் வதனம் பதிக்க,
என் MEMORY CARD தவிக்கிறது...!
என் உலகம் நீதான்,
அதை முழுதாய் நம்பிவிடு....!
உன் SIMCARD-ஐ எனக்கே,
நிரந்தரமாய் நீ தந்துவிடு....!
இறுதியாக ஒன்று,
உன்னை மகிழ்விக்க,
இத்தனை பொய்கள் ஏன் தேவைப்படுகிறது..????
( கைபேசி கீழே விழுந்து நொறுங்கியது...!)
- MAK