உறங்காத உயிர்

படுத்துத்தான் கிடக்கிறேன்
கண் உறக்கமுமில்லை,
அது கனவுகளா நினைவா
பிரித்துணரவும் முடியவில்லை...

எட்டுமணி உறக்கம் நாளும்
தேவையாம், மருத்துவர்கள் உரை.
எட்டாத உறக்கத்தை கூட
நினைவில் கொள்ளமுடியாமல் நான்...

ஆனாலும் அலுப்புமில்லை,
விட்டெழ விருப்புமில்லை,
மதமதப்பில் விளைந்த ஒரு,
ஆனந்தக் கதகதப்பு.....

திகட்டிடுமே இந்த இனிப்பும்,
நின்றிடுமே அந்த ஆரவார
ஐம்புலன்களின் சிரிப்பும், காலம்
மறைந்து இனித்திடுமே கனிக்காதல்...

ஆருயிர் காதலி ஓருயிராய்,
அதனினுள் ஆழ்ந்துறங்கும்
எலும்பும், சதையும் பிணைந்து
இறை செய்யும் மருந்து, மறந்து.....

நெனவுகளுள் கனவாய்
மூழ்கி மூழ்கி மிதக்கிறாய்...
நினைத்தால் தியானமாய்
மரூவி மரூவி மலர்கிறாய்.....

எழுதியவர் : தீ (2-Apr-13, 8:52 am)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 76

மேலே