உண்மை .................

அழுகிய காய்க்கறிக்கூடை
சுருங்கிய முகமுடையாள்
கூன் விழுந்த தோற்றம்
உருளைக்கிழங்குகளை பொறுக்கி
தன் பையில் நிரப்பிகொண்டிருக்கிறது.
உள்ளம் வெம்புகிறது !
ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால்!!

---ஜெயந்தி

சுருங்கிய முகமும்
கூன் விழுந்த தோற்றமுமாய்
அழுகிய காய் கறிக்கூடையில்
சிதறி வீழ்ந்த உருளைக்கிழங்குகளை
பொறுக்கி நிரப்பியபடியே தொடர்கிறது உருவம்
உள்ளம் மட்டும் வெம்புகிறது
ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால்!!

(ப்ரியாவுக்கு திருத்தியதற்கு நன்றி)

நரைத்த மயிர்
சுருங்கிய முகம்
வளைந்த முதுகோடு...

அங்காடி ஓரமிருந்த
அழுகிய மரக்கறி
கூடையிலிருந்து
பொருக்கி எடுத்த
உருளைக் கிழங்கை
நிரப்பிய படியே
நடந்து போகிறது
அந்த விரக்தி நிறைந்த
உருவம் !

எதுவும் செய்ய முடியா
நெஞ்சோடு அவள்
நடந்து போகிறாள்- நான்
கடந்து போகிறேன் !

(கலைக்கு திருத்தியதற்கு நன்றி)

எழுதியவர் : ஜெயந்தி , பிரியா, கே.எஸ். கல (8-Apr-13, 4:19 pm)
பார்வை : 113

மேலே