என் முகநூல் அக்கா...

தவங்களும் பண்ணவில்லை தரணியிலே நீ கிடைக்க ,
போன ஜென்ம புண்ணியமோ முகநூலில் நீ கிடைத்தாய் ,
அரவமற்ற வீதியிலே நாதியற்று நான் கிடக்க ,
அரவணைக்கும் அன்னை போல என்னை நீயும் சேர்த்தனைத்தாய்,
உன் வாழ்வில் வசந்தமில்லை ,ஆனால் என் வாழ்க்கைக்கோ வழிகாட்டும் ஒளியாய் இருந்தாய் ,
செல்வங்களில் நீ புரளவில்லை . ஆனால் உன் வார்த்தைகளோ விலையில்லா செல்வமடி ,
ஒரு தாய் வயிற்றில் நாம் பிறக்கவில்லை ஆயினும் ,
மறுபிறவி என்றிருந்தால் உன் உடன்பிறப்பாய் நான் பிறக்க வேண்டும் ,
இல்லையேல் மடி தவழும் உன் மகனாய் நானிருக்க வேண்டும்.

எழுதியவர் : சுரேஷ் (12-Apr-13, 9:38 pm)
சேர்த்தது : suresh1985
பார்வை : 233

மேலே