ღ முடிந்தால் மன்னித்துவிடு ღ

அத்தனை பேரின் சார்பினும்
மொத்தமாய் கேட்கிறேன்
ஆண்களை நீ மன்னித்து விடு

பகடையாய் பெண்களை எண்ணி
பழகிவிட்டவர்கள் நாங்கள்
சக்தியின் சக்தியை ஏற்க சக்தியின்றி
கால்களை தூக்கி தாண்டவமாடி
புராணம் படைத்தவர்கள் நாங்கள்

வீதியில் போகும் பெண்களை எல்லாம்
கண்களிலே கற்பழித்த
கயவர்கள் நாங்கள்

உதிரத்தை பாலாக்கி
ஊட்டிவிட்ட தாயின் மார்பு
பெண்களையல்லாம் தாயென்று
என்னாத பேய் மணம்

சீதனம் கேட்டு பெண்களை
சீரழித்த விசவாயு நாங்கள்
மனைவின் பணத்தை வாங்கி
தாசிகளை தேடியோடும்
தரமட்டற ஆண்கள் நாங்கள்

நாங்கள் கடலை தாண்டி
வந்துவிட்ட மீன்கள்,
செந்தாமரையை விட்டு
சேற்றினை தேடும்
தெளிவற்ற மூடர்கள் .!!!

ღஎங்களை மன்னித்து விடு.!!ღ

எழுதியவர் : கா மணி சாரோ (13-Apr-13, 9:59 pm)
சேர்த்தது : மணி
பார்வை : 140

மேலே