என் இதயம் உன்னை நினைத்தே துடி துடித்து சாகட்டும்,,,

என் கண்கள் ஒளி இலக்கட்டும்
என் கைகள் செயல் இலக்கட்டும்
என் கால்கள் நடை இழக்கட்டும்
என் உதடுகள் ஊமை ஆகட்டும்
என் செவிகள் கேளாமல் போகட்டும்
என் நுரை ஈரல் அறுந்து போகட்டும்
என் உயிர் அணுக்கள் செத்து போகட்டும்
என் ரத்தம் உறைந்து போகட்டும்
என் விரல்கள் நலிந்து போகட்டும்
என் மூளை குலைந்து போகட்டும்
என் நரம்புகள் வெடித்து சிதறட்டும்
என் இதயம் உன்னை நினைத்தே
துடி துடித்து சாகட்டும்,,,

என்னை மறந்து
வேறொருவன் கருவை
பெற்றெடுக்க உன்னால் எப்படி முடிந்ததடி

உனக்காக காத்திருந்து
காத்திருந்து வீணாகி போனதடி
என் காதல்

உன் குங்குமம்,
தாழி, உன் கைகுழந்தையை
கண்ட போது
மிகபெரிய பேரழிவு எனக்குள்
நிகழ்ந்ததை எப்படி புரியவைப்பேன் உனக்கு

உன் புது கணவனுடன்
உன் குழந்தையை கொஞ்சி, குலாவி
என்னை கடந்து சென்ற போது
கண்கள் வெடித்து சிதறிய என் கண்ணீர் துளி
உன் இதயம் நனைக்க வில்லையாடி,,,?

உன்னை மட்டுமே சுமந்து
என் இதயம்
வேறொரு பெண்ணை சுமக்க
அனுமதித்ததில்லையடி
உன் இதயம் மட்டும்
வேறொருவனின் கருவை சுமக்க
எப்படி அனுமதித்தது சொல்லடி,,,?

இனி காலமெல்லாம் உன்
கணவனோடு ஆனந்தத்தில் -நீ

உன் நினைவோடு
நரகத்தில் -நான்

காலங்கள் மாறினாலும்
என் நெஞ்ச கூட்டில் எழுதிய
உன் பெயரின் தழும்புகள் அழியுமா

இரண்டு முறை முயற்சித்தும்
மரணம் கூட என்னை வெறுத்து
ஓடி போனதடி,,,

இனி தானாகவே
என் கண்கள் ஒளி இலக்கட்டும்
என் கைகள் செயல் இலக்கட்டும்
என் கால்கள் நடை இழக்கட்டும்
என் உதடுகள் ஊமை ஆகட்டும்
என் செவிகள் கேளாமல் போகட்டும்
என் நுரை ஈரல் அறுந்து போகட்டும்
என் உயிர் அணுக்கள் செத்து போகட்டும்
என் ரத்தம் உறைந்து போகட்டும்
என் விரல்கள் நலிந்து போகட்டும்
என் மூளை குலைந்து போகட்டும்
என் நரம்புகள் வெடித்து சிதறட்டும்
என் இதயம் உன்னை நினைத்தே
துடி துடித்து சாகட்டும்,,,

வலியுடன்,,,உன்னவன் நந்திசெல்வா,,,

எழுதியவர் : நந்திசெல்வா (14-Apr-13, 4:24 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 208

மேலே