(உயிர்) முத்தம்.....

(அ)ச்சிட்ட உதடுகள்
(ஆ)சை தீர,
(இ)ச்சிட்டு விளக்கும்
(ஈ)கைப் பண்பு..

(உ)ச்சத்து அன்பை
(ஊ)டலில் விளக்கும்,
(எ)ச்சிலை ரசித்த முதல் தருணம்
(ஏ)டுகளில் படிக்கா புது சுகம்.

(ஐ)ந்தறிவுக்கு இல்லா வரம்
(ஒ)ருபோதும் கிட்டா சுகம்,
(ஓ)ரறிவு அதிகம் கொண்டவன் பெற்றான்
(ஔ)வைக்கு முந்தைய காலம் தொட்டு..

அஃது மனிதன் சுகவாசியானான்..!!

எழுதியவர் : பிரதீப் (26-Apr-13, 2:18 am)
பார்வை : 232

மேலே