மன பேதம் விலக்கடா...

உழைப்பில்
உயர்நிலை ஊழியன்
கடைநிலை ஊழியன் எனும்
பேதம் மனதில் நீக்கு
ஒத்த மனிதனாய் நோக்கு...
ஒழுக்கப் பண்பைத் தூக்கு...

உழைப்பில் உயர்வென்ன...தாழ்வென்ன...
ஒத்த மனிதரை மதிக்கும்
அன்பில் பேதமென்ன...
பிறப்பில் வானிலிருந்து
நீ உதித்தாயோ ...அவனென்ன
களிமண்ணிலிருந்து உயிர்த்தானோ...

பிறப்பும் இறப்பும் அனைவர்க்கும்
சமம் தானடா...
இடைப்பட்ட வாழ்வில்
மன பேதம் விலக்கடா...
அன்பால் இணைந்த மனிதராய்
ஒற்றுமை கீதம் முழங்கடா...!!

-- நாகினி

எழுதியவர் : நாகினி (1-May-13, 5:38 pm)
பார்வை : 76

மேலே