காதல் என் பிள்ளை
காதலே நீ,
ஏன் வந்தாய் ??
எப்படி வந்தாய் ??
எதற்கு வந்தாய் ??
எங்கிருந்து வந்தாய் ??
வந்தாய் !!
நீராய் !!
நெருப்பாய் !!
காற்றாய் !!
வானமாய் !!
பூமியாய் !!
வந்த உன்னை,
கருவாய் சுமக்கிறேன் !!
பெற்றெடுக்க துணிந்தேன் !!
பாலுட்டி , சீராட்டி வளர்க்க ஆயத்தமானேன் !!
மௌனம் வளர்வதற்கு....
உயிர் வாழ்வதற்கு......
தாயானேன்..
உன் உயிர் சொல்லால் !!
காதல் என் பிள்ளை !!
காதலித்து பார் !!
சாக துணிவிருந்தால் ....