சதுரங்க ஆட்டம் தான்

கூடுகட்டி ஆட்டம் போட்டு
கூட்டத்திலே கலந்து கொண்டு
நேற்று வந்து எட்டிச் செல்லும்
நெஞ்சமே யாரது ...

தோற்றுத்தான் போய்விடினும்
தோல்லிக் கூட பயமில்லை
தொடர்ந்துவரும் துரோகம் தான்
எனக்கிருக்கும் தொல்லை ...

பாடிசென்ற பாட்டைக் கூட
ஏறிட்டுப் பார்த்ததில்லை
ஏகோபித்த பேச்சுக்கு
இங்கொன்றும் குறையில்லை ...

இன்றுவந்த இரட்டை குருவி
நம்வீட்டில் கூடுகட்ட
நமக்குவரும் ஆபத்து
நல்லதில்லை என்ற பயமோ ...

வீடுகட்டி ஆட்டம் போட்டது
வேதனைதான் என்று புலம்பு
சாதனை பல உண்டு -- இது
சதுரங்க ஆட்டம் தான் ....

வெற்றி ஒன்றும் உந்தன் வீட்டின்
வெற்றுத்திரை இல்லை
பிறந்தவர் மரணிப்பார்
இதுதான் நேரிய கொள்கை ..

எழுத்தினிலே மோதியும்
எண்ணத்தை வீசியும்
பரிதவித்துப் போனதுன் பக்குவமே
பாருன்னை இகழ்ந்திருக்கும் இக்கணமே ...

வெற்றியின் பக்கத்தை
ஒருசாரர் பகிர வேதனையின்
உச்சமோ வெற்று வார்த்தைகள்
விடியலை தேடு ..வேதனை வேண்டாம் ..

எவருக்கும் நிரந்தரமில்லை
வெற்றியின் கடைசி படிகட்டு
ஏறுபவர் வரும் வரைதான்
எட்டி மிதிப்பார் ஏற்றம் கொண்டு ...

தோல்வியில் துவழாதெ
துரோகங்கள் நினையாதே
கட்டியணைக்கும் தோள்கள் -ஒருநாள்
கட்டவிழ்ந்து போகும் ..

கடைசிவரை கருணைதான்
உனக்கிருக்கும் சொத்து
காத்துக்கொள் கயமையழித்து
கற்புகொண்டு நட்புடனே ........

எழுதியவர் : bhanukl (7-May-13, 10:02 pm)
பார்வை : 266

மேலே