ஆசையில்லா மனிதன் இங்கே யாரடா ?
கொடிய விலங்கின்
குணங்கள் கொண்டு
மனிதன் வாழ்கிறான் - அவன்
ஆசையென்னும் தீயில்
அடியோடு வீழ்கிறான் .
ஆசையில்லா மனிதன்
இங்கே யாரடா ?
அவனியில் இருந்தால் கூறடா .
கடைசியில் போகும் தருவாயில்
நமக்கு தேவை நாலு பேரடா
நீ வாழும்போது
நாலு பேரிடமாவது
நட்பை பழகிப்பாரடா.
ஆசையில்லா மனிதன் இந்த
அவனியில் எங்கே கூறடா .
ஆசையை அசைபோடா மனசு
யாருக்கிங்கே பாரடா .
விலங்கோடு போட்டிபோட்டு
இரப்பையை நிரப்புகிறான்
அன்று !
விலங்காய் இருந்தவன்
மனிதனாய் மாறி வந்தானே .
இன்று !
மனிதனாய் இருக்கும் இவன்
விலங்காய் மாறி போறானே .
மனிதன் என்பவன்
தான் ஒரு மனிதன் என்பதை
மறந்துவிட்டு
மிருகமாக நடக்கிறான்
மிருகத்திடம் உள்ள
இறக்கம் கூட இல்லாமல்
இந்த மனிதன்
கொடிய மிருகமாய் கிடக்கிறான் .
************************
நம்பிக்கையுடன்.சிங்கை கார்முகிலன்