நண்பர்கள்!!!

புவியில் பூக்கும்
அழகிய நறுமணம்
உள்ள பூக்கள்
நண்பர்கள்!!!

இறைவனின் அருளில்
கிட்டும் இணையில்லா
இன்பமயமான வரங்கள்
நண்பர்கள்!!!

மனம் எனும்
வானில் உயர
உயரே பறக்கச்செய்யும்
வண்ணமயமான சிறகுகள்
நண்பர்கள்!!!

சோதனை எனும்
சூழ்கடலை சுலபமாய்
கடக்கச்செய்யும் பலம்
பொருந்திய துடுப்புகள்
நண்பர்கள்!!!

தடை எனும்
பெருமலையை சுக்குநூறாய்
தகர்த்தெறியும் உறுதி
மிக்க உளிகள்
நண்பர்கள்!!!

நம்மின் குறைகளை
நேரடியாய், நேர்த்தியாய்
பிரதிபலித்து திருந்த
செய்யும் கண்ணாடிகள்
நண்பர்கள்!!!

நம் புகழை
எட்டுதிக்கும் பாடி
திரியும் வானம்பாடிகள்
நண்பர்கள்!!!

இன்பம் துன்பம்
என இரண்டிலும்
மனதால் பங்கு
கொள்ளும் பங்குதாரர்கள்
நண்பர்கள்!!!
****************************************************************************
வாழ்வுதனில் சுடர்
ஒளியேற்றும் ஆதவனாய்!!!

காயம்பட்ட வேதனை
உள்ளத்தை அன்பால்
அரவணைத்து களிம்பிடும்
குளிர்ந்த முழுமதியாய்!!!

கண்களை சிமிட்டி
உற்சாகப்படுத்தும்
நட்சத்திர கூட்டங்களாய்!!!

பாரம் தாங்கும்
புவியாய்!!!

உயிர் வாழ
செய்யும் சுவாசக்காற்றாய்!!!

இன்னும் யாதுமாகியாய்
நண்பர்கள்!!!
****************************************************************************
அன்னையின்றி,ஐயனின்றி,
அருமை உடன்பிறப்புகள்
ஒன்றுமின்றி காதலுமின்றி
வாழுமே உயிர்
நட்பின்றி வாழாது.!!!
****************************************************************************
நண்பர்களை கொண்டாடுங்கள்!!!

-அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (23-May-13, 12:13 am)
பார்வை : 1092

மேலே