மிளகாயின் மகிமை
காசு கொடுத்து வாங்கி பார்...
காரமான சுவை என்று உணர்ந்து பார்..!
வீட்டில் சமையலுக்கு சுவையானவன்... உன்
வீரத்திற்கு ரோஷம் தருகிறேன்..!
பஜாரில் இருப்பேன்... நீ என்னை
பஜ்ஜி செய்து விற்கிறாய்..!
திருடன் வந்தால் என்னை
அவன் முகத்தில் அடித்துவிடு...
திருந்தி வந்தால் என்னை வைத்து
அவனுக்கு விருந்தளித்திடு..!