குறுஞ்செய்தி....

நீண்டு கொண்டே இருக்கிறது
எனக்கும் அவனுக்குமான
இடைவேளை
இரவில் மட்டும் ...
குறுஞ்செய்தி எல்லாம் குறுகிப் போய்
தொலைந்து விடுகிறது
இரவின் இருட்டில் !!
கதிரவன் வருகைக்காக காத்திருக்கும்
காத்திருப்பும் ஒரு
சுமையான சுகம் தான்!!!