அனைத்து உறவுகள் இருந்தும் அனாதையாய் நான்

என்னவனே....

என் அன்னையின்
அரவணைப்பை உணர்ந்தேன் .....

உன் கைகோர்க்கும் போது....

என் தந்தையின்
அக்கறையை உணர்ந்தேன் ....

உன் கண்டிப்பு ஒவ்வொன்றிலும் ...

என் சகோதரியின்
அன்பை உணர்ந்தேன் ....

உன்னுடன் செல்ல சண்டை போடுகையில்

என் உயிர் நண்பர்களின்
உண்மையான நட்பை உணர்ந்தேன் ....

ஒவ்வொரு நாளும் உன்னுடன்
நான் வாழ்ந்த நிமிடங்களில் ....

என்னையே நான் உணர்ந்தேன் ...
நாம் நேசித்த தருணங்களில் ...

ஆனால் எல்லா உறவுகளும்
என்னுடன் இருக்கும் போதே
மனதளவில் அனாதையாக
இருப்பதாய் உணர்கிறேன் ...

உன்னை பிரிந்து நான்
வாழ்ந்துக்கொண்டிருக்கும்
இந்த நொடி வரை .....

எழுதியவர் : சங்கீதா.k (28-May-13, 4:58 pm)
பார்வை : 354

மேலே