நான்

நான் இக்கணம்
எங்கு இருக்கிறேன்?
எங்கு இல்லை?
நான் எவ்விடத்தில்
எதில் இருக்கிறேன்?
எதில் இல்லை?
நீ எங்கு
இருக்கிறாயோ அங்கும்
இருக்கிறேன் நீ
எங்கு இல்லையோ
அங்கும் இருக்கிறேன்
யாரும் என்னை
புறக் கண்கொண்டு
பார்த்ததில்லை காரணம்
நான் புறக் கண்களுக்கு
புலப்படுவதில்லை
ஆனால் அக
கண்களால் என்னை
தேடுவோருக்கு எளிதாய்
காட்சி அளிக்கிறேன்
உருவமாக இல்லை
மாறாக உணர்வுகளால்
உணரக்கூடிய வடிவத்தில்
மட்டும்
பலர் சொல்கிறார்கள்
நான் எங்கும்
நிறைந்திருக்கிறேன் என்று
ஒருசிலரோ என்னை
கண்டதாகவே அப்பட்டமாய்
பொய் சொல்கிறார்கள்
இன்னும் சிலரோ
நான் இல்லவே
இல்லை என்கிறார்கள்
ஆனால் நான்
இம்மூவரின் நிலைகளையும்
அவர்களின் நெருக்கத்தில்
இருந்தபடி தெள்ளத்தெளிவாய்
கண்டு குறிப்பெடுத்து
கொண்டுதான் இருக்கிறேன்
நான் காற்று
என்று நீங்கள்
நினைத்தால் அது
முற்றிலும் தவறு
நான் காற்றே
இல்லா வெற்றிடங்களிலும்
கற்றே புக
முடியதா இடங்களிலும்
காட்சி இல்லாமல்
நிலையாய் இருக்கிறேன்
அவ்வளவு ஏன்
காற்றையே படைத்தவன்
நான் என்றாலும்
தவறாக அமையாது
எனக்கு
ஏழை பணக்காரன்
என்று மட்டுமல்ல
நீர், நெருப்பு
வான், பூமி
மேடு, பள்ளம்
என எல்லாவற்றிலுமாய்
பொதுவாகவே நிலைத்திருப்பவன்
நான் யார்
என்பதை இப்பொழுதாவது
புரிந்து கொண்டீர்களா?
புறக்கண்ணை சற்றே
மூடியபடி ,அகக்கண்ணை,
திறந்திடுங்கள் காட்சியே
இல்லாமல் காட்சிதர .
காத்திருகிறேன் உங்கள்
உள்ளங்கள் மூலமாய்
முழுமையாய் உணர்வீர்கள்..,,,!!!
-அன்புடன் மென்மையானவன்
****************************************************************************
கண்கள் மூடினேன்
நவீன் என் அககண்முன்
சற்று நேரத்தில்
காட்சிகளும் இல்லை
காணமும் இல்லை
நானும் இல்லை
நவீனும் இல்லை '
நாளையும் இல்லை
நஷ்டமும் இல்லை
அன்பு மட்டும் -அதனோடு
சேர்த்து பால்வெளியில்
பயணம் செய்கிறோம்
அககண் மூடி
அண்டத்தில்
நட்சத்திர கூட்டங்களோடு
கருங்குழி என்ற சிவகளத்தில்
கலக்க !!!!!
-அன்புடன் கார்த்திக் பாரதி 87