சில நிமிடங்களுக்கு முன்பு

இந்த சில நிமிடங்களுக்கு முன்பு என்பது எவ்வளவு சுவாரசியமானது, இனிமையானது, எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு துயரமானது ,

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இந்த சிலநிமிடம் . . . . . . ?


நான் ஒரு சிறிய வேலை காரணமாக சென்னை திருவெற்றியூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் என் பக்கத்துக்கு சீட்டில் ஒருவர் தொடர்ந்து செல்போனில் பேசிகொண்டே வந்தார்

முதலில் ஒரு நபரிடம்

இல்ல கோதண்டம் இங்க நிக்க கூட நேரமில்லாமல் ஓடிகிட்டு இருக்கேன் பொண்ணுக்கு வேற அடுத்த வாரம் கல்யாணம் வச்சிருக்கேன் அந்த வேலை வேற நான் கண்டிப்பா அடுத்த மாசம் வரேன் கோதண்டம்


அடுத்த நபரிடம்

சொல்லும்மா உடம்புக்கு எப்படி இருக்கு ? நான் எத்தனை தடவ சொல்லி இருக்கேன் எனக்கு ஊருக்கு வர எல்லாம் நேரம் இல்ல, உன் பேதி வேற அடுத்த வரம் கல்யாணம் வச்சுக்கிட்டு இப்ப வந்து எனக்கு அது வேணும் இது வேணும்னு கேட்டுகிட்டு இருக்கா . . . . இங்க எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சிட்டு குடும்பத்தோட வரேன் சரியா . . . . . சும்மா தொன தொணன்னு சொன்னதையே சொல்லாதம்மா நான் வரேன் . . .



அடுத்த நபரிடம்

என்ன பூங்கொடி சொல்லு . . . . . . இதோ பழைய வண்ணாரப்பேட்டை தாண்டி வந்திட்டு இருக்கேன் பழம் எல்லாம் வாங்கியாச்சு, ஜோதி என்ன பண்றா? ஜோதிய எதுவும் சொல்லாத நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுல எப்படி எல்லாம் இருக்குமோ? இங்க இருக்கற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும் . . . .. ..


சில நிமிட பேச்சுக்கு பின்


இதோ நம்ம வீட்டுகிட்ட வந்துட்டேன் . . . பஸ் ஸ்டாப் போய் இறங்கி இந்த வெய்ல திரும்பி நடக்க முடியாது . . . எப்படியும் போலீஸ் ஸ்டேஷன் கிட்ட பஸ் மெதுவாதான் போகும் நான் இறங்கிடுறேன் . . . . நீ வைய்மா . . ..

. . . . . . . . . . . . . . . . . . . . . . .


..............................................



அந்த " நீ வைய்மா " என்ற வார்த்தை தான் நான் கடைசியாய் கேட்டது

அப்புறம் . . ..


பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கிழே இறங்க ஆரம்பித்தார் ஆனால் அவரால் இறங்கி அங்கேயே நிற்க முடியாமல் சற்று தூரம் பேருந்தின் பின் வந்து கால் தவறி பேருந்து சக்கரத்தில் சிக்கி . . . .


அப்புறம் அவரின் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வெளியேற சிறிது நேரத்திற்குள் இறந்தே போனார் அதனால் நான் சென்ற பேருந்து அதே இடத்தில் நிறுத்தப்பட்டது


அவர் இறக்கும் முன்பு துடிதுடித்தது இன்றும் என் கண்ணுக்குள்ளே நிற்கின்றது


சில நிமிடத்திற்கு முன்பு வரை மகளின் திருமணம், ஊர் பயணம், திருமண பத்திரிக்கை, என எதுஎதுவோ பேசியவர் ஒரு சில நிமிட நேரம் நடக்க பிடிக்காமல் உயிரை விட்ட சம்பவம் இனி யாருக்கும் வர வேண்டாம் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்

எழுதியவர் : எழுத்தாளன் சஷி (17-Jun-13, 10:43 pm)
பார்வை : 232

மேலே