india

வாக்கு கேட்ட மந்திரியின்
வாசம் என்ன பணமா...!
ஒட்டு போட்ட ஏழைகளோ
பட்டினியில் பிணமா...!
கோடி கணக்கில் நடக்குதையா
நாட்டுக்குள்ளே ஊழல்...!_தெருக்
கோடி அதை கேட்டு நின்றால்
காவல்துறை ஏவல்...!
லஞ்சத்துக்கு காவல் நிற்கும்
வஞ்சம் கொண்ட சட்டம்...! _ எங்கள்
பஞ்சம் போக்க நாதியில்லை _ ஆனாலும் கேட்கிறார்கள் "வல்லரசு" பட்டம்...!
பருப்பு மணம் நுகரகூட
வசதி இங்கில்ல...! _ஆனால்
கருப்பு பணம் கொட்டிகிடக்கு
சுவிசு வங்கில...!
குடியரசு நாட்டினிலே
குற்றம் ரொம்ப நீளுது...!
"ஸ்பெக்ட்ரம்" போன்ற ஊழல்களோ
வரம்பு எல்லை மீறுது...!
வயிற்றுப் பசிக்கு திருடியவன்
வய்தா போட்டு அலைகிறான்...! _ நாட்டின்
வயிற்றில் அடிச்சு வாழ்பவனோ
"ராசா" வாழ்கை வாழ்கிறான்...!
ஏழைபாளை குடியிருக்க
இல்லை ஒரு உறைவிடம்...!
முதலடிக்கும் வரிசையிலே
முதல்வருக்கே முதலிடம்...!
அம்பானியும் மனிதன்தானே
அவனுக்கோ "அன்டிலியா"வீடு...! _ நாட்டின்
அச்சானியாம் விவசாயிக்கோ
கையில் திருவோடு...!
எங்கள் பைப்படியே பரவாஇல்லை
பகுதிநேர சண்டைதான்...!
பார்லிமென்ட் பாணியெல்லாம்
பகல் முழுதும் சண்டைதான்...!











எழுதியவர் : punavai Bakya (12-Dec-10, 4:49 pm)
சேர்த்தது : bakya
பார்வை : 425

மேலே