பாழாப்போன மனுசப்பய !
பாழாப்போன மனுசப்பய !
பணம் பணம்முன்னு அலையுறான்
பணம் தேடி தேடி தொலயுறான் !
பணம் தேடி தேடி
உறவுகள தொலைக்கிறான் !
பணம் பணமுன்னு அலையுறான்
பணம் பின்னாலதான்
ஓடி ஓடி தொலயுறான்
நீ தொலஞ்சு உறவை தொலைச்சு
பணம் கிடச்சா
அதனால உனக்கு என்னடா பயன் .
நீ நெனச்ச பணம் கிடச்சா
அத வச்சு என்னடா நீ பண்ணுவ .
நாம வாழுறது சில காலண்டா
வாழும் காலத்தில நாலு பேருடனாச்சு
அன்பா பழகி பாரேண்டா ப்ரண்டா .
ஒரு நாள் அணியும் சட்டைய
மறுநாள் அணிய தயங்கும்
மானிடனும் இங்கே வாழுறான் .
ஒருநாள் கூட அணிய ஒரு
சட்டை கூட இல்லாமல்
தவிக்கும் மானிடனும்
இங்கே வாழுறான் .
முட்டாளும் கூட இங்கே
மூட்டைமூட்டையா
பணத்தை அள்ளுறான்
அறிவாளிகூட இங்கே
ஒருவேளை சோத்துக்கு
வழியில்லாமல்
தெருதெருவா அலையுறான் .
பணம் இல்லேயேல் -இங்கே
தினம் தொல்லையே
பணம் உள்ளதேல் இங்கே
தினம் இல்லையே தொல்லையே .
பணம் தேடுங்கள் தவறில்லை .
உறவுகளை தொலைத்து
பணம் தேடலில் பயணிக்காதீர்கள்
உறவு என்பது உங்களுக்கு
இறைவன் கொடுத்த வரவு ..
********************** நம்பிக்கையுடன்.சிங்கை கார்முகிலன்