விடை என்ன

மொழி பேசுகிறது
நெற்றியில் மீசை சைகையில்
உன் மவுனத்தின்
விடை என்ன ?

இதழ் விரிக்கிறது
பட்டாம்பூச்சியின் ஸ்பரிசத்தில்
உன் புன்னகையின்
விலை என்ன ?

பறவை பறக்கிறது
என் மனமெல்லாம்
உன் விழிகள் தரும்
மொழி என்ன ?

மேகங்கள் கலைகிறதே
நிம்மதி பெருமூச்சில்
உன் சிந்தனையின்
விலை என்ன ?

வழி மேல் விழி
விழிகளை வழிகளாய்
பிரித்துப் பார்ப்பதில்
சுகம் தான் என்ன ?

மலர்ப்பாதங்கள் ஆழ் மணலில்
மென்மையாக மலர
மவுன அடிகளின்
கேள்வி தான் என்ன ?

என் இதயத்தின் வாசல்
திறந்தே இருக்கும்
உன் பார்வை யில்
துடிப்புகளின் பதில் என்ன ?

எழுதியவர் : தயா (22-Jun-13, 4:24 pm)
பார்வை : 257

மேலே