குறுங் கவிதைகள் மூன்று

வல்லவன் மிரட்டுகிறான்
ஆயுதம் எடுக்காமல்
தன் வாலிலே ! ....தேள்

வானையும் மண்ணையும்
பிளந்து கொட்டுகிறான்
திறவுகோல் இல்லாமலே !... நீர்

இரவில் மட்டும் இவன்
விழிப் பார்வை மிரட்டும்
பகலில் குருடனாம் !....ஆந்தை

கணக்கற்ற பற்கள்
மழையைக் கண்டதும்
பதுங்குவான் ஒட்டு வீட்டுக்குள்!...நத்தை

உடல் வெப்பம் தணிக்கும்
இனிப்பு ஊட்டிக்காரன்
ஏழைக்கு நண்பன் !......ஆரஞ்சு (கிச்சிலிப் பழம் )

பிஞ்சிலும் பழத்திலும்
வெயிலின் குளிர்ச்சிப் பழம்
ஏழையின் கொடைக்காரன் !...வெள்ளரி (காய் ,பழம் )

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-Jun-13, 10:23 am)
பார்வை : 124

மேலே