அவள் நினைவாக

என் அருகில்
எனது நிழல் இருந்தும்
நான் அனாதையாக தான்
இருக்கிறேன்

என் இதயம் துடித்து
கொண்டு இருந்தாலும்
நான் இறந்து போனது போலத்தான்
வாழ்கிறேன்

ஒரு பெண்ணின் மீது
அளவுக்கு மீறிய அன்பை
காட்டி விட்டு இன்று
எமாற்றம் கண்டேன்
கண் இமையில் கண்ணீரையும்
கண்டேன்


அவளை காண கூடாது
என்று நினைத்து இருந்தாலும்
அவள் செல்லும் நேரத்தை
விழிகள் ஞாபகம் வைத்து கொண்டு
அவளை காணவே ஆசை படுகிறது

அவள் பெயரை மறக்க
நினைக்கும் நேரம் எல்லாம்
அவள் பெயரை சொல்லி
கொண்டே உதடுகள் ரசிக்கிறது
என்றும் மறந்து போகுமா
உன் பெயர்

என்னை தொட்டு போகும்
காற்றுக்கு தெரியுமா
என் மனதில் உள்ள
கஷ்டம் சொல்லடி

நான் உன்னை
எந்த அளவுக்கு நேசித்தேன்
என்று உனக்கு தெரியுமா
என்றாவது ஒரு நாள்
நீ என்னை நினைத்து பார்ப்பாய்
என்றும் காத்து இருப்பேன்

நான் உன்னை எப்படி மறக்க போகிறேனோ
என் மரணம் வரை நீயும் என் இதயத்தில்
வாழ போகிறாய்
நினைவாக ........

எழுதியவர் : பனித்துளி வினோத் (28-Jun-13, 2:53 pm)
சேர்த்தது : panithulivinoth
Tanglish : aval ninaivaaga
பார்வை : 179

மேலே