என்ன எழுத ?

என் கவிதைகள்
புளித்துப் போயின
இன்று எழுத்துக்கள் பரண் மேல்
அன்று எழுதி எழுதித் தேய்ந்த
என் பேனாக்கள்
இன்று மந்தமாயின
புரட்டிப் புரட்டி பூரித்த
என் கவி ஏட்டின் பக்கங்கள்
உலர்ந்து போயின
புரியாமல் என்
எண்ணங்கள் புதைந்து போயின