அப்பா

அப்பா
நம்மின் முன் எழுத்துக்குச் சொந்தகாரர்
முகவரி தந்தவர்
வெளிவர வேராய் அமுங்கியவர்
வளர்ந்தவுடன் விழுதாய்த தாங்குபவர்
தான் வீழ்ந்தாலும்
நாம் விழாமல் காப்பவர் !

அப்பா
நடமாடும் தெய்வம்
குடும்பம் என்னும்
கோபுரம் தாங்கும் அஸ்திவாரம் !

அது என்னவோ தெரியவில்லை....
அப்பாவின் தியாகங்கள்
அப்பொழுதே ம்றக்கப்படுகின்றன
இது அப்பாக்களுக்கு
அளிக்கப்பட்ட சாபம்!

எழுதியவர் : வெ. நாதமணி (8-Jul-13, 8:48 pm)
பார்வை : 79

மேலே