கனவுக் காதல்

இமையோடு இமைசேரும் போது
இருளிற்குள் படமாக
ஆழ்மனதின் கிடக்கைகளை
அள்ளித்தெளிக்கின்றாய்
சொப்பனத்தில்.....
அஸ்த்தமித்துப்போன
ஆயுள்ரேகையின்
ஆரம்பத்தை துளிர்க்கச்செய்து
ஆலமர விழுதாக
ஆணிவேரோடு
ஆழ்ந்து ஊன்றிக்கொண்டாய்....
ஆசைகளோடு
ஆனந்தம்பொங்கிய தருணங்கள்
அசைபோடும்போதெல்லாம்