என் இனிய நாடு

என் இனிய நாடு
பொங்கும் எழில் பூக்கும் பூக்கள்
எங்கும் தொழில் இசைபாடும் பறவைகள்
சங்கத்தமிழ் இசையில் தேனும்
சான்றோரை கவரும் வண்டும்
அறவழியே அரசரின் பண்பு
கொடை உணர்வே மன்னரின் மாண்பு
மேகத்தை முட்டும் இமயம்
சமரசத்தில் வாழும் பல சமயம்
இயற்கையாய் வளர்ந்தது களாண்
உழவனின் வியர்வையில் வளர்ந்தது எங்கள்
வேளாண்!!!
இப்படி……
வளமாக வளர்ந்த எங்கள் பாரதம்
கயவர் கையில் சென்றது பாதகம்
வெகுண்டெழுந்த நம் வீரர்க்கு இல்லை பயம்
வெட்கம் இல்லாத கயவர்க்கு இல்லை நயம்
எங்கள் வீரத்திற்கு இணையில்லை¬ அந்நியன் ஓதல்
இல்லாத நிலையிலும் எடுக்கமாட்டான் இந்தியன் ஈதல்
அமைதி புரட்சியே…. எங்கள் ஆயுத புரட்சி
ஆண்டவனும் இருந்தான் எங்கள் கட்சி
அதிர்ந்து போனது கயவரின் வேட்டி
அசைத்து பார்த்தோம் அமைதியை காட்டி
உப்புக்கு வரி விதிப்பது வெள்ளையன் முத்திரை
உணர்ச்சி கொண்டுவந்ததே தண்டியாத்தரை
காலம் வந்தது காயம் மறைய
வெற்றியின் தழும்புகளோ மனதில் நிறைய
அமைதி புரட்சியின் எங்கள் ஆத்மா
அவர் விடைபெறும்போது எங்கள் மகாத்மா
பார்வையில் நாங்கள் வேறு நிற சரித்திரம்
பாரதம் என்றால் படைபோம் இரத்த சரித்திரம்……
@@@@@ ஜெய்ஹிந்த் @@@@@

எழுதியவர் : supersuji (18-Jul-13, 7:34 pm)
சேர்த்தது : supersuji
பார்வை : 116

மேலே