அனுபவப்படு!
தேவையற்றதை நீக்கு
சிலையாய்
கல் சிரிக்கும்
தேவையானதை
நேர்த்தியானதைச் சேர்
ஓவியமாய் உயிர் பெற்றெழும்!
கூட்டழும் கழித்தழும்தான்
வாழ்க்கையை வளர்க்கிறது
ஆகவே
கூடும்போது குதிக்காதே!
கழியும் போது கலங்காதே!
எல்லாம்
இயற்கையின் நிகழ்வென
அனுபவப்படு
அனுபவம்தான்
உனக்கே உன்னை
அடையாளம் காட்டுகிறது!ॐ