மன்னிப்போம் மறப்பதில்லை

வாழ்வின் பலதருணங்கள்
பல்வேறு இடர்பாடுகள்
கட்டிபோட்ட கட்டுக்கள்
கயவன் வார்த்தைகள் கற்றுத் தந்தன
மன்னிப்போம் மறப்பதில்லை ....

காரணமிருக்க கருத்து பகிர்ந்தோம்
கங்கணம் கட்டி காலை வாரினார்
கடும் நெருப்பில் புடம் போட்டதாக
கர்வம் கொண்டோம் .சுடும் சொற்களை
மன்னிப்போம் மறப்பதில்லை ......

மாசற்ற மகத்துவங்கள் மலர்ந்தாலும்
மூச்சற முள்வேலியமைத்து முனங்கிக்
கொண்டிருக்கும் மூத்தோர் வார்த்தைகள்
மன்னிப்போம் மறப்பதில்லை....

சேர்ந்து வாழ சேதிபகிர்ந்தோம்
செவிடனேன்று கிலாகிப்பதில் சேதாரம் பிணந்தின்னும் பித்தலாட்டத்திற்கு
மன்னிப்போம் மறப்பதில்லை .......

ஆகாயமும் பூமியும் தாங்கும் அதிசயம்
தலைகால் புரியாமல் தள்ளாடும் தரித்திரம்
தன்மானத்திற்க்கே இழுக்கென்று தெரியாமல்
தவிடையும் பொடியாக்கும் தம்பட்டம்
மன்னிப்போம் மறப்பதில்லை.....

இயற்கையே இசைந்திருக்க
செயற்கையை சிற்பமாக்கும்
சிதிலமடைந்த சில்லறைத்தனம்
பிள்ளையை பேனாக்கி
எள்ளை எருமையாக்கி
எட்டிப்பார்க்க வைக்கும் வேதியல் மாற்றம்
மன்னிப்போம் மறப்பதில்லை .....

கூடும் குப்பைகளை கூட்டித்தள்ள
பாடும் பறவைகளுக்கு ஓரிடம் பகிர
எழுதும் பேனாவால் ஏகாந்தம் மிளிர
கேட்க்கும் காதில் ஆனந்தம் பாய
மன்னிப்போம் மறப்பதில்லை .....

கர்வம் கொண்டவன் கனன்றே சாவான்
ஆளுமை கொண்டவன் அகிலம் வெல்வான்
துர்நாற்றம் வீசும் துரியோதன குணம்
எடுத்தியம்புவது ஏகோபித்த மனம்
ஏமாளிகள் இல்லை எதிரே நிற்ப்பவர்
மன்னிப்போம் மறப்பதில்லை .......

எழுதியவர் : bhanukl (28-Jul-13, 9:41 am)
பார்வை : 121

மேலே