உன்னை கண்ட பொழுதில்

உலகில் உள்ள அழகெல்லாம்
ஒன்றாய் கூடி வந்ததோ என்று
உன்னை கண்ட பொழுதில் நான்
இதயம் கிள்ளி பார்க்கிறேன் !

நீ பேசும் வார்த்தைகளெல்லம்
எனக்குள் கவிதையாய் சேர்த்துக் கொண்டு
என் இதய கல்வெட்டில் நான்
தினமும் எழுதி படிக்கிறேன் !

உன்னை கண்ட நொடியிலே
நொடிந்து கீழே விழுந்தேன்!
உன் காந்த விழியிலே
துள்ளி மேலே எழுந்தேன்!!

நான் நினைக்கும் பொதெல்லாம்
என் கண்ணில் நீ உதித்தாய்!
தேன் மணக்கும் பூவாய் -உன்னை
என் நெஞ்சில் நீ பதித்தாய்!

ஏனோ இந்த துன்பம் என்று
தினமும் நான் துடிக்கிறேன்!
தோனோ இதயதில் கலந்தது என்று
தேடித் தேடி தவிக்கிறேன் !!!

-பாலாஜி

எழுதியவர் : பாலாஜி (4-Aug-13, 3:41 pm)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
பார்வை : 109

மேலே