மனிதா .... நீ .... !!

வீட்டுக்கு மரம் ஒன்று நட்டு
பசுமையை சுவாசிக்க
மனிதா நீ - எழுந்து விடு....!!

புகையில்லா பூலோகம்
புதுமையாய்ப் படைத்திட
மனிதா நீ - புறப்படு..... !!

புவிவெப்பமடையாமல் தடுத்து
சுற்று சூழல் பேண
மனிதா நீ - கிளம்பி விடு ..... !!

இயற்கையோடு இயைந்ததே
உன்னத வாழ்க்கை
மனிதா நீ உணர்ந்து விடு ..... !!

பூமியை வாழவிடு .. பூமியை வாழவிடு ..இன்றேல்
சாமிகூட துணைவராது ....
பூமியை வாழவிடு ...... !!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Aug-13, 3:13 pm)
பார்வை : 69

மேலே