தாரகையின் கவிதை ----கல்பனா பாரதி

தாரகையின் "சுமைகள் இல்லாமல் சுகங்கள்
இல்லை " கவிதையின் கருத்தினை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

அருமை அருமை அற்புதமான கவிதை இங்குள்ள புள்ளிகள்எல்லைக்குட்பட்டது எண்ணற்ற இதயப் புள்ளிகளை வழங்குகிறேன். புல்லை இடியை மின்னலை மழையை இந்தஇயற்கையை எல்லோரும்தான் பார்க்கிறோம் . கவித்துவ
உணர்வோடு ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்துடன் தரிசிக்கும் போது உன்னதமான கவிதை பிறப்பெடுக்கிறது .
எண்ணிக்கையின் வரிசையில் நின்று எத்தனையோ பேர் கவிதை எழுதுகிறார்கள். எண்ணத்தின் சிகரத்திலிருந்து
கவிதை யாப்போர் ஒரு சிலரே. POETRY IS NOT EVERYBODY 'S CUP OF TEA . உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் கொட்டி இரைத்தால் கவிதை ஆகி விடாது. உணர்வுக் காற்றினை ஊதி
பொதிகைத் தமிழ் கொண்டு செய்த பொன்னகை கவிதை .
இது தாரகை செய்த பொன்னகை.
தாங்கள் யாத்த வரிகளின் நேர்த்தி :
ஆரம்ப வரிகளிலிருந்தே கவிதை நெஞ்சை அள்ளிச் செல்கிறது.

ஓயாமல் சிமிட்டுவதால் இமைகள்
தேய்வதில்லை
சாயாமல் நிற்ப்பதால் மரங்கள்
சலிப்பதில்லை
---ஓய்ந்து கிடக்காதே செயல் படு.

காயாத மலரில்லை
தேயாமல் நிலவில்லை
-----என்ன இனிமையான தத்துவ வரிகள்.

கொய்யாத மலர்கள்
மாலையாவதில்லை
நெய்யாத நூல்
சேலையாவதில்லை
தோல்விகள் என்றும்
நிரந்தரமில்லை
வெற்றி என்பது
தூரமில்லை!
----கவிதைக்கு மகுடம் வைத்தாற் போன்ற செயலினை வலியுறுத்தும் அருமை வரிகள்.அகிம்சையைப் போதித்த
அண்ணல் காந்தியும் சுதிந்திரப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் செயல் படு அல்லது செத்து மடி என்று குரல் கொடுத்தார் .
வில்லினை விட்டெறிந்து விட்டு போர்க்களத்தில் சோர்ந்து கிடந்த அருச்சுனனையும் " இது வீரனுக்கு அழகல்லடா , வில்லெடு செயல் படு " என்று ஆணையிட்டான் கீதையில் கண்ணனும் . செயலே மனித இயக்கத்தின் தத்துவம் ,
செயல் இல்லையேல் மனிதன் நடக்கும் பிணம்.
கொய்யாமல் மலர்கள் மடியில் வந்து விழாது கோர்பதற்கு.
பருத்தி ஆடையாக காய்ப்பதில்லை என்பது பழைய பழ மொழி
நெய்யாத நூல் சேலையாவதில்லை என்று அதை நேர்த்தியான கவிதை வரிகளில் தந்திருக்கிறீர்கள்.
கடைசியில் கவிதைக்கு தலைப்பு தந்த முத்தாய்ப்பான வரிகள் :
.
சுமைகள் சுமையல்ல
ஒத்துக்கொள்.
---உண்மை ,
சுமப்பதை அவள்
சுகமாகக் கொண்டதால்
நாம் பிறப்பெடுத்தோம்
வலியும் நோவும் அழுகையும்
தாய்மையின் ராகமல்லவா
மார்பில் அணைத்து அதை
மகிழ்ச்சியில் மாற்றிப் பாடியது
நமக்கு தாலாட்டல்லவா ?

சுமைகள் சுகமானதே. அன்னை நமக்கு கற்றுத் தந்த தத்துவம்
ஆயிரம் தாரகைக்கிடையில் ஒரு முழு நிலவு என்று காலையில் எழுதினேன் . மாலையில் கருத்தினை மாற்றிக் கொண்டு விட்டேன். ஆயிரம் நிலவுகள் இந்தத் தாரகைக்கு நிகராகுமோ !
இக்கவிதை இந்த ஆண்டின் இலக்கிய விருதினைப் பெற என் வாழ்த்துக்கள். முன்னோடியாக என் இதய விருதினைத் இங்கே தந்து விட்டேன். வாழ்த்துக்கள் தாரகை.
----நட்புடன்,கல்பனா பாரதி.

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Aug-13, 9:52 pm)
பார்வை : 225

மேலே