இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை - கார் நாற்பது 33

இன்னிசை வெண்பா

கடனீர் முகந்த கமஞ்சூல் எழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்1
இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி யெவ்வங் கெட! 33

- கார் நாற்பது

பொருளுரை:

கடலினது நீரை முகந்த நிறைந்த சூலினையுடைய மேகம் மேற்கு மலையிடத்து தான் கொண்ட, நீரினைச் சொரியும் சமயமென்று அப்பொழுதே பேதையாகிய மடப்பத்தினை யுடைய மொழியை யுடையாளது வருத்தம் நீங்க (மீளுங் காலத்திற்குந்) குறி செய்தேம்; (ஆதலால் தேரினை விரையச் செலுத்துக)

சூல் போறலின் நீர் சூலெனப்பட்டது; ஆகம் - அகம் என்பதன் நீட்டல்; மார்பு எனினும் ஆம்; கொள்ளப் பிறக்கும் என்பது பாடமாயின் தாரை கொள்ளத்தோன்றும் எனப் பொருளுரைக்கப்படும்;

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (18-Oct-25, 7:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே