சாதி எனும் வன் கொடுமை 555
சாதி...
பள்ளிக்கு பயில சென்றால்
கேட்ட முதல் வார்த்தை...
என்ன சாதி...
கல்லூரியில் பயில
விண்ணப்பம் கேட்டால்...
அவன் கேட்ட முதல்
வார்த்தை சாதி சான்றிதழ்...
சாதி பேரை சொலி
மக்களை வேறுபடுத்தும்...
வாதிகளே உண்மையான
தீவிரவாதிகள்...
நந்தவனம் முட்காடு
என்று பாராமல் வீசும்...
தென்றலை போல...
யாரென தெரியாமல்
காதல் எனும் வார்த்தையால்...
இரு உள்ளங்கள்
சங்கமித்து...
வாழ
நினைக்கும் போது...
சாதி பேரை சொல்லி
எதிர்கின்றனர்...
காதலை அல்ல
அவர்களின் உயிர்களை...
சாதி பேரை சொல்லி
ஆதாயம் தேடும்...
சில வாதிகளை
வேரறுப்போம் இன்று...
சாதி இரண்டென்று
பாடிய பாரதியின்
வார்த்தை உண்மையென...
சாதிபேரை சொல்லி
ஆதாயம் தேடும்...
சாதி தீவிரவாதிகளை
வேரறுப்போம் நாளை...
நாம்.....