வெகு அருகில் இருக்கும் இறைவன்
லிங்காஷ்டகம்
எப் எம்மில் ஒலிபரப்பியபடி இருக்க
அடுக்கி வைக்கப் பட்ட
கருப்பு நாவல் பழங்கள்
அருள் மிகு சகஸ்வர லிங்கம் போல் தோன்ற
கண்ணில் கண்ட காட்சியில்
கூவி விற்கும் வியாபாரி
கும்பிடத் தோன்றும் சிவ ஞானி.....!!!