ராவின் நோவுகள்

நெருக்கங்கள் மூச்சோடு
கலக்கும் தருணங்களில்
வார்த்தைகள் முட்டி வெடிக்கிறது.
எத்தனை முறை எழுதிமுடித்தாலும்
காற்றைக்கொண்டு காயப்படுத்துகிறாள்.
கடிகார முற்களின் வேகத்தை தாண்டியே
அழுகைகள் அதிகரிக்கிறது.
யாரும் அறியப்படாத அர்த்தங்கள் ஆயிரம்
அவளும் கூட,,,,,
சந்தோஷமான நாட்கள் சாகத்துடிக்கிறது,
வெட்கத்தை விழுங்கியே இளமை அலைகிறது.
எத்தனை முறை அழைத்தாலும்
தூரத்தைக்காட்டியே
பயணிக்கச்சொல்கிறாள்,,,,

எழுதியவர் : இர்பான் அஹ்மீத் (10-Aug-13, 2:52 am)
சேர்த்தது : ifanu
பார்வை : 63

மேலே