மழை நீர்
என் கண்கள் கலங்குதடி
நீ அழும் வேளையிலெல்லாம்
நீ அழுவதோ
மானுடரின் இன்பத்துக்காக
நான் அழுவதோ
உந்தன் கண்ணீருக்காக...
இன்னும் எத்தனை
மழை நீரை - நீ
கொட்டி தீர்த்தாலும்,...
கடல் நீரை,
மழை நீர் என்று
வர்ணிக்குமே தவிர - அது
உந்தன் கண்ணீர் என்று
யாரும் அறியார்...

