வஞ்சகமும் வீரமும்

பல வெற்றிகளோடு தோல்விகளைக்
கண்டும் மனம் தளறாமல் களமாடிய
எம் புலிகளின் வீழ்ச்சியைக் கண்டு
கூப்பாடு பாடும் சிங்களமே

நீயோ வஞ்சகத்தையே
கவசமாய் கொண்டு களமாடினாய்
நாங்களோ வீரத்தையே
கவசமாய் கொண்டு களமாடினோம்

வஞ்சகத்தால் போரை வென்றும்
மார்தட்டியும் உலகின் வீரவரலாற்றில்
இடமில்லை உமினத்திற்கு
போரில் தோல்வியைத் தழுவியும் எம்
வீரத்தால் உலகமே போற்றும் மாவீரர்களென
புதிய வரலாற்றைப் படைத்துள்ளோம்

நீயோ மாற்றானின் கரமின்றி போரில்
வெற்றியைக் கண்டதில்லை
நாங்களோ இறுதிவரை தனித்து நின்று
உலகமே வியக்க பல வெற்றிகளைச்
சூடி தோல்வியைக் கண்டோம்

எம் புலிகளில் ஒருவன் தனித்து
வந்ததைக் கண்டு தரித்தோடிய
காலத்தை நினைவில் கொள்

மீண்டும் எம் புலிகள் களமாடும்
காலம் தூரத்திலில்லையடா

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (15-Aug-13, 9:07 am)
பார்வை : 102

மேலே