உண்மையிலேயே உணர்ந்து சொல்லுவோம் "சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்" !!!!

சுதந்திரம்!!!

ஏமாற்று தந்திரங்களால்
வாங்க இயலாமல்,
அஹிம்சை எனும்
ஒற்றை சொல் மந்திரத்தால்
மகுடம் ஏறியது இந்திய தாயின் சிரசில்.

ஊழல், அநீதி, சுரண்டல், தீவிரவாதம்
எத்தனையோ இருக்கிறது
சுதந்திரம் கிடைக்காமலேயே
இருந்திருக்கலாமே
என்று நாம் நினைக்க...

இப்படி நினைப்பதால் தவறு செய்தவர்களுக்கு
சவுக்கடி கொடுப்பதாய் தான் தோன்றும்
ஆனால் உண்மையில் நாம் அவமதிப்பது,
தன் உறவு, மக்கள், மனைவி, குடும்பம்
என்பதை தாண்டி தன் நாடு என்று நினைத்து
அதற்காகவே ஒவ்வொரு மணித்துளியும்,
போராடிய நம் மகாத்மா காந்திகளை!!!!

நினைத்து பார்க்க முடியுமா??
தனக்கென்று ஒரு நாடில்லாமல்,
அகதியாய், அடிமையாய் ஒரு வாழ்வை,
நிதமும்??
கனவிலே கூட சாத்தியமற்ற ஒன்றினை
வெகு சாதாரணமாய் விமர்சிக்கிறோம்..
இந்த சுதந்திரம் இருப்பதற்கு
இல்லாமலேயே இருந்திருக்கலாமே என்று...

நமக்காக போராடியவர்கள் நினைக்க வேண்டும்
இதை
இவர்களுக்காகவா போராடினோம் என்று...
எப்படி கிடைக்கும் லஞ்சத்திலிருந்து சுதந்திரம்,
நாம் கொடுத்து கொண்டே இருந்தால்??
எப்படி கிடைக்கும் அநீதியிலிருந்து சுதந்திரம்,
நாம் கைக்கட்டி வேடிக்கை பார்த்தால்??

சுதந்திரம் என்பது, வாழ்வோடும் பணத்தோடும்
மட்டும் எடைபோட படவேண்டிய ஒன்றல்ல....
நாம் விடும் மூச்சிலிருந்து, பேசும் பேச்சுவரை
நினைத்து மகிழ வேண்டிய ஒன்று....
தவறுகளும், கொடுமைகளும் நடக்காத
நாடில்லை
அவர்கள் எல்லாம் நம்மை போல,
கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி பேசி
நேரத்தை வீணாக்குவதில்லை.
மாறாக தன் அருகில் நடக்கும்
தவறுகளை களைவார்கள்...
நமக்கோ என்றும் தூரப்பார்வை தான்..

உண்மையிலேயே உணர்ந்து சொல்லுவோம்
"சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்"

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (15-Aug-13, 10:49 am)
பார்வை : 208

மேலே