ஜெய்ஹிந்த்

காடுங்குளிரோ உன்னை உரைக்க
காதல் கனவுகள் மனதை கரைக்க
அன்னையின் முகமோ அழைக்க
ஆசை தாய்மொழி பேசிட துடிக்க
இருந்தும் நீ
தேசத்திற்கு என்று அரிதாய்
மனதை நிறைக்க


ஒருநொடி கண்கள்
தூக்கத்தை அழைக்க
மறுநொடி பகைவரோ உன்னை
சுற்றி வளைக்க
பட்டென்று தோட்டாக்கள் உன்
நெஞ்சை துளைக்க
மரணத்திலும் உன்குரல்
ஜெய்ஹிந்த் என்று ஒலிக்குதடா!!!!!!

எழுதியவர் : (15-Aug-13, 11:31 am)
பார்வை : 96

மேலே