நல்ல சேதி

வானம் கருத்திருக்கு
மழைவரக் காத்திருக்கு

வந்தமழை தண்ணியெல்லாம்
வருவாயா மாறிடிச்சு

எங்க ஏரி,குளமெல்லாம்
ஏக்கம்தீர நெறஞ்சிருச்சு

ஆத்தா மாரிமனத்தால
மக்கள்மனம் குளுந்திருச்சு

குளிர்ந்தமனம் அத்தனைக்கும்
கதகதப்பா ஒருசேதி

சொல்லவந்த சின்னபையன்
சொடுக்குராண்டி சாட்டையத்தான்.

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (19-Aug-13, 5:04 pm)
பார்வை : 122

மேலே