நல்ல சேதி
வானம் கருத்திருக்கு
மழைவரக் காத்திருக்கு
வந்தமழை தண்ணியெல்லாம்
வருவாயா மாறிடிச்சு
எங்க ஏரி,குளமெல்லாம்
ஏக்கம்தீர நெறஞ்சிருச்சு
ஆத்தா மாரிமனத்தால
மக்கள்மனம் குளுந்திருச்சு
குளிர்ந்தமனம் அத்தனைக்கும்
கதகதப்பா ஒருசேதி
சொல்லவந்த சின்னபையன்
சொடுக்குராண்டி சாட்டையத்தான்.