ஊமைகள் .....

நாங்கள்
மௌனத்தின் சிம்மாசனங்கள்
வார்த்தைகளின் மயானங்கள்
கனவுகளின் சிறைகள்
கருத்துக்களின் ஒரு வழிப்பாதைகள்
உலகப் பொதுமொழி
எங்கள் தாய்மொழி
ஒலிஅலைகளை செலவழித்துவிட்டு
வார்த்தைமுத்துக்களை சேமித்து வைத்திருக்கும்
மனக்கடல் நாங்களே....
நாற்றமடிக்கும் வார்த்தைராணிகள்
நடனமிடாத நாக்குமேடைகள்
எங்களுக்குச் சொந்தம்
உருவகங்களால்
உள்(ள) பொருளைக்
கூறிவிடும் நாங்களும்
புதுக்கவிதைகளே........!

எழுதியவர் : சுப.முருகானந்தம் (28-Dec-10, 11:09 pm)
பார்வை : 505

மேலே