காக்கையின் அரிய நற்பண்புகள் ஆறு!

காக்கையின் அரிய நற்பண்புகள் ஆறு!

ஒரு பழம்பாடல் காகங்களிடம் காணப்படும் ஆறு நற்பணபுகளைக் கூறுகிறது. எளிமையான ஒரு வெண்பா வடிவில் அமைந்துள்ள அப்பாடல் இதுதான்:

காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனைபுகுதல் – சாலவே
உற்றாரோ(டு) உண்ணல் உறவாடல் இவ்ஆறும்
கற்பாயே காக்கைக் குணம்.

உரையே தேவையின்றி எளிதில் புரிகின்ற இப்பாடல் ‘விநோத ரச மஞ்சரி’ என்ற நூலில் காணப்படுகின்றது.

எழுதியவர் : (2-Sep-13, 9:44 pm)
சேர்த்தது : சீனிவாசன்
பார்வை : 117

மேலே