கனா கலைகிறேன்.. நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்!!!

கனா கலைகிறேன்..
நன்றியுடன்
நினைத்துப் பார்க்கிறேன்

நான் வாழ ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்

நான் முத்துச் சேர்க்க
மூச்சடக்கி
முத்துக் குளித்தவர்கள்
என் ஆசிரியர்கள்

நாங்கள் பரிட்சை எழுத
நீங்கள் அல்லவா படித்தீர்கள்
நாங்கள் வெற்றிப் பெற
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள்

கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
எங்களைச் செதுக்கிய
சிற்பி அல்லவா நீங்கள்

மழையின் அருமை தெரியாமல்
மழையைக் கண்டு ஓடுபவர்போல
உங்களைக் கண்டு ஓடினோம்
மழையின் அருமை
கோடையில் தெரியும்
உங்களின் அருமை, பெருமை
இப்போது உணர்கிறேன் !

எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால்
நோக்கம், லட்சியம் ஒன்று தானே
என் மாணவன் முன்னேற வேண்டும்
தேர்ச்சிப்பெற வேண்டும்
வெற்றி பெற வேண்டும்
ஆஹா !
எத்தனை உயரிய எண்ணம்
நீங்கள் அல்லவா
நினைத்துப்பார்க்க வேண்டியவர்கள் ...


எத்தனைக் கேலிகள்
எத்தனைக் கிண்டல்கள்
எத்தனைத் துன்பங்கள், தொல்லைகள்
உங்களுக்குச் செய்தோம்
இன்று நினைக்கையில்
என் உள்ளம் வலிக்கிறதே
உங்களிடம்
மன்னிப்புக் கோருகிறோம்
எங்களை மன்னியுங்கள் -

இன்று வரையிலும் ,
இனிமேலும்
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு
நாங்கள் அடையும் புகழுக்கு
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா!

எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறத்தானே

எத்தனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்

உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கறைச் செலுத்தினீர்கள்
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களைத் திட்டித் தீர்த்திருந்தாலும்
நிகழ் காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...!

நன்றியுடன் உங்களை
நினைத்துப் பார்க்கும்

உங்கள் மாணவி ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (5-Sep-13, 7:26 am)
பார்வை : 103

மேலே