உனக்கு நீ விளக்காய் இரு

தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள்
விதைகளின் விருட்சமாம் ...
அணிந்திருக்கும் ஆடைகள்தான்
எண்ணங்களின் வார்த்தைகளாம் ..!
ஆடம்பர ஆபரண வார்த்தைகளை விட
ஞானம் தான் செவிக்கு தரும் வார்த்தைகளாம் ...!
வார்த்தைகளிலிருந்து என்ன பெறுகிறோமோ
உங்களிடமிருந்தே அது வெளிக்கொணர்கிறது ...
விளக்கின் ஒளியில் அனைத்து
இருளும் மறைவது போல ...
உனக்கு நீ விளக்காய் இரு
வெளிச்சமாக்குவார்கள்
அனைவரும் உன்னை ....!

எழுதியவர் : தயா (8-Sep-13, 10:18 pm)
பார்வை : 292

மேலே