தேடு....தேடு...

வாழ்வின் உனது முகவரியாய்
எழுத்துக்கள் கிடைத்தன எனில்
வசந்தத்தை அதில் பிறருக்கு
நீ கொடு...
அல்லாவிடின்
இன்னும் எழுத்துக்களைத் தேடு..தேடு...
கொடுப்பதற்கே எழுத்துக்கள் ..கெடுப்பதற்கல்ல ..!!

காலத்தின் ராகமாய் உனது பிறப்பு
சுரங்களாய் உனது வாழ்வெனில்
இசையை பிறருக்கு கொடு .....
அல்லாவிடின்
இன்னும் சுரங்களைத் தேடு....தேடு...
இசையானதே வாழ்வு வசைகளின் வலையல்ல..!!

வழியும் துயர் துடைப்பானாய் நீ
விரல்கள் அதற்குத்தான்
வலி நீக்கி வழி தா பிறருக்கு....
அல்லாவிடின்
இன்னும் விரல்களை பெற வழி தேடு..தேடு..
வலி நீக்கத்தான் விரல்கள் ...கையின் அழகல்ல..!!

எழுதியவர் : வீரன் தாமரை (9-Sep-13, 9:57 am)
சேர்த்தது : veeranthamarai
பார்வை : 97

மேலே